Month: April 2026

மேற்காசியப் பிராந்தியப் போர்நிறுத்தத்தை வரவேற்கிறது இலங்கை

மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்தும் அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலைத் தணிப்பதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக இதனை…

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது ஆர்டெமிஸ் II

ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11)…

மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக்…

புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர்…

தனியார் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்த விசாரணைகளில் குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் புத்தாண்டு…

இலங்கையின் பணவீக்கம் 5.2% ஆக உயரும் என எதிர்வு கூறல்

இலங்கையின் பணவீக்கம் 2025-ஆம் ஆண்டில் காணப்பட்ட -0.5 மட்டத்தில் இருந்து 2026-ஆம் ஆண்டில் 5.2% ஆக அதிகரிக்கக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எதிர்வு கூறியுள்ளது. அந்த வங்கியினால் இன்று (10) வெளியிடப்பட்ட 2026 ஏப்ரல் மாதத்திற்கான ஆசிய அபிவிருத்தி…

கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு திருப்புமுனையை அடையாளப்படுத்தும் வகையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று 9, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

யாரும் பார்த்திராத தாக்குதலை நடத்துவோம் – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஈரானுடன் “உண்மையான உடன்படிக்கை” ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘Truth Social’ சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,…

தேயிலைக்கு மேலதிக உரமானியம் அறிவிப்பு

மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் QR நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொள்வதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதன்படி, மார்ச் 31 ஆம் திகதி வரை 187,759 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகளுக்கு 21,117.7 மெற்றிக்…

புத்தாண்டு உபசரிப்பு மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளத் தடை.

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு உபசரிப்புகளை நடத்துவதற்காக உத்தியோகத்தர்களிடம்…