Category: உள் நாட்டு செய்திகள்

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையை 2026 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார். இடர்…

பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாத கால சலுகைக் காலம் வழங்கப்படும்…

முள்ளிக்குளம் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் – ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம்

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனையை வலுசக்தி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

வழிபாட்டு தலங்களுக்கும் 25,000 ரூபாய்!

பேரிடர் காரணமாக அனர்தத்திற்குள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வழிபாட்டுத் தலங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய யோசனையை ஜனாதிபதி…

முட்டை விலை அதிகரிப்படாது – உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யும் நோக்கில் சிலரால் இந்தத் தவறான கருத்துக்கள்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாறி மாறி வருகின்ற ஒவ்வொரு அரசாங்கங்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…

மனித உரிமை ஆணைக்குழுவில் நீதி கேட்கும் யாழ் 16 வயது சிறுவன்

யாழில் வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம்.கிராம சேவையாளருக்கு எதிராக 16 வயது மாணவன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர்…

பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ள Google Map!

வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன்இணைந்து A மற்றும் B பாதைவரைபடங்களை புதுப்பித்துள்ள Google Map! இலங்கையின் A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் (12,000 கி.மீ.) தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது. வீதி மூடல்கள்,…

உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை

சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு…

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் சபை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு பிரதான அலுவலகத்தின் ஊடாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களும், புத்தளம் மாகாண அலுவலகத்தின் ஊடாக…